search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல்பட்டு கலெக்டர்"

    • தமிழகத்தில் புராதன நினைவு சின்னங்கள், இயற்கை எழில் சூழ்ந்த மலை வாழிடங்கள், அருவிகள் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் நிறைந்து உள்ளன.
    • பதிவு செய்ய தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் எச்சரித்து உள்ளார்.

    மாமல்லபுரம்:

    தமிழகத்தில் புராதன நினைவு சின்னங்கள், இயற்கை எழில் சூழ்ந்த மலை வாழிடங்கள், அருவிகள் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் நிறைந்து உள்ளன. இவற்றை கண்டுகளிக்க ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வருகின்றனர். இப்படி வரும் சுற்றுலா பயணிகளில் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன் கருதி சுற்றுலாத்துறை அனுமதியுடன் உண்டு உறைவிடம் நடத்துபவர்கள், சாகச சுற்றுலா நடத்துபவர்கள், முகாம் நடத்துபவர்கள், கேரவன் பார்க் சுற்றுலா நடத்துபவர்கள் என தனியார் நிறுவனத்தினர் பலர் இந்த பணிகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அத்தகைய நிறுவனங்கள் செயல்பாட்டிற்கு தமிழக அரசு வழிகாட்டி நெறிமுறைகளை கடந்த ஆண்டு அறிவித்து, தற்போது அவை நடைமுறையில் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் உள்ளிட்ட பல இடங்களில் சுற்றுலா முகவர் பிரிவுக்கு உட்பட்டோர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சுற்றுலாத்துறையில் முறையாக பதிவு செய்யாமல் இயங்குவதும் சுற்றுலாத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    எனவே வருகிற 31-ந்தேதிக்குள் www.tntourismtors.com என்ற இணைய தளத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், தனியார் சுற்றுலா நிறுவனத்தினர் பதிவு செய்ய வேண்டும் என்றும், பதிவு செய்ய தவறினால் அந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் எச்சரித்து உள்ளார்.

    • பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • அரசு ஆஸ்பத்திரி வளாகம், தாம்பரம் (இருப்பு) குரோம்பேட்டையில் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30க்குள் விண்ணப்பிக்கவும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    செங்கல்பட்டு மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள 5 சமையலர் மற்றும் சலவையாளர் போன்ற பணியிடங்களில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பங்கள் அரசு ஆஸ்பத்திரி வளாகம், தாம்பரம் (இருப்பு) குரோம்பேட்டையில் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்குள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்று நகல்களுடன் விண்ணப்பிக்கவும்.

    இதுபோல செங்கல்பட்டு மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் மாமல்லபுரம், திருப்போரூர் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும ஈஞ்சம்பாக்கம் அரசு புறநகர் ஆஸ்பத்திரியில் 3 பல் மருத்துவ உதவியாளர் தற்காலிக பணியிடங்களில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 15-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் விணணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியத்தையும், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவும் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.
    • யாரேனும் குழந்தை திருமணம் செய்வது தெரிந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் ஐந்துகாணி பகுதியில் பல ஆண்டுகளாக இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாய கூலி வேலை மற்றும் மரம்வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இருளர் இன குடும்பங்களில் உள்ளவர்கள் யாரும் பெரும்பாலும் படித்ததில்லை. இப்போது தான் முதல்முறையாக இங்கு உள்ள குழந்தைகளில் 4 பேர் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். ஒரு பெண் மட்டும் பன்னிரண்டாவது படித்து வருகிறார். இவர்கள் பெரும்பாலும் வீடு அருகில் உள்ள காரைதிட்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 4 முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து, பிறகு மேல் படிப்புக்காக வேறு பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர்.

    இதன் காரணத்தை அறியவும் மேலும் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியத்தையும், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவும் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். அப்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வெழுத உள்ள தேவி என்ற பெண்ணை அழைத்து படித்து என்னவாக விரும்புகிறாய்? என மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் கேட்டதற்கு அந்த பெண் வங்கி மேலாளர் ஆகப்போவதாக தெரிவித்தார். உடனடியாக அந்த மாணவியை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    அதைதொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரி சங்கீதா பேசும்போது, திருமண வயதை அடையும் முன்பே குழந்தைகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் எனவும், அப்படி செய்யும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்தார். அப்படி யாரேனும் குழந்தை திருமணம் செய்வது தெரிந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றார்.

    • விண்ணப்பம் சமர்ப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
    • விண்ணப்பங்கள் பெறும் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டு, வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மருத்துவ அலுவலர், ஒப்பந்த செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர், ஆதரவு ஊழியர் பணிநியமனம் செய்ய விண்ணப்பங்கள் 27.1.2023 அன்று மாலைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    24.1.2023 நாளிட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அரசாணை எண்.26-ல் மேற்படி பணிகளுக்கான பணிவிவரம் மற்றும் பணி பொறுப்புகள் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிநியமனம் செய்ய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறும் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டு, வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    ஏற்கெனவே, விண்ணப்பம் சமர்ப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    விண்ணப்பங்களை செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், செங்கல்பட்டு அலுவலத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு (https://chengalpattu.nic.in-ல் பார்க்கவும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வடலூர் ராமலிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
    • மதுபானம் சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடடிக்கை எடுக்கப்படும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வடலூர் ராமலிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் நாளை (ஞாயிற்றுகிழமை) மூடப்பட்டிருக்க வேண்டும்.

    அன்றைய தினங்களில் கடைகள், மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தன.

    • செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கானத்தூர் அருகே தனியார் கலை, கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
    • பல்வேறு நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

    மாமல்லபுரம்:

    தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கானத்தூர் அருகே தனியார் கலை, கலாச்சார மையத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மண்பானையில் பொங்கல் வைத்தனர்.

    விழாவில் கரகம் ஆடுதல், உறியடித்தல், மாட்டுவண்டி பயணம், கிளி ஜோசியம் பார்த்தல், உள்ளிட்ட விளையாட்டுகளும் நடத்தப்பட்டன. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றும், கண்டும் ரசித்தனர்.

    அப்போது மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலையில கரகம் வைத்து ஆடி அசத்தினர். மேலும் அவர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்.

    கும்மியடித்தல், கரகம் ஆடுதல், மாட்டு வண்டி பயணம் உள்ளிட்டவற்றில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்று நெகிழ்ச்சி அடைந்தனர்.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் வியாழக்கிழமை நடத்த மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார்.
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் வியாழக்கிழமை நடத்த மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.1 கோடி வரையிலான திட்டத்தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி பெற்றவை.
    • தேவையான பொது கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்தவும் திட்ட தொகையில் 35 சதவீதம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டங்களுள் ஒன்று, மத்திய, அரசின் 60 சதவீத நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆகும்.

    இந்த திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், ஊறுகாய், வற்றல், அரிசி ஆலை, உலர் மாவு மற்றும் ஈர மாவு தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், மரச்செக்கு எண்ணெய், பேக்கரி பொருட்கள், தின்பண்டங்கள் தயாரித்தல், மசாலா பொடிகள் தயாரித்தல், பால் பொருட்கள் தயாரித்தல், இறைச்சி மற்றும் மீன் வகைகள் பதப்படுத்தல் போன்ற தொழில்களை தொடங்கவும் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்தல் செய்யவும் பயன் பெறலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், ஏற்கனவே உணவுபதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன் பெறலாம்.

    ரூ.1 கோடி வரையிலான திட்டத்தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி பெற்றவை. திட்டத்தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தம் பங்காக செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லா கடனாக வழங்கப்படும். அரசு 35 சதவீதம் மானியம், அதிக பட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். சுய உதவி குழுவினர் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும். உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தேவையான பொது கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்தவும் திட்ட தொகையில் 35 சதவீதம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன் பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். இதுவரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டம் இனி வரும் காலங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாகச் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே, ஆர்வமுள்ள தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் இந்த திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற 6, ஏகாம்பரனார் தெரு (புதிய பஸ் நிலைய பின்புறம்), வேதாசலனார் தெரு, செங்கல்பட்டு என்ற முகவரியில் அமைந்த மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வருகிற 11 மற்றும் 25-ந் தேதிகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடப்பாண்டு இம்மாதத்தில் வருகிற 11 மற்றும் 25-ந் தேதிகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள்.

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரை வெண்பாக்கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அதில் கூறப்பட்டிருந்தன.

    • 2022-ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31.10.2022 ஆகும்.
    • தகுதியுடைய நபர்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதுபெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருதுதொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதல்-அமைச்சர் அவர்களால் தேர்வு செய்யப்படுகிறார்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில், 2022-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் "சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூகநீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் போன்ற தகுதிகள் உடையவர்கள் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

    தங்களது விண்ணப்பம் தங்களின் பெயர், பிறந்த இடம் மற்றும் நாள், தாய்- தந்தை மற்றும் குடும்ப விவரம், தற்போதைய முகவரி (தொலைபேசி எண்ணுடன்), கல்விதகுதி, இனம் மற்றும் ஜாதி, தொழில், சமூகநீதிக்காக பாடுபட்ட விவரம், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூகசீர்திருத்தக் கொள்கை குறித்து சிறு குறிப்பு கலை இலக்கியம் சமூகபணி ஆகியவற்றில் உள்ள ஈடுபாடு குறித்து சிறு குறிப்பு மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    2022-ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31.10.2022 ஆகும். மேற்படி தகுதியுடைய நபர்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீன் குஞ்சுகள் வளர்க்க மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
    • அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலகத்தின் மூலம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பின் கீழ் கீழ்காணும் திட்டங்களில் பயன்பெற மீனவ பயனாளி, மீனவ விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தில் ஒரு அலகுக்கு மகளிர் பிரிவினருக்கு 60 சதவீதம் மானியம் ரூ.12 லட்சம் வழங்கப்படவுள்ளது.

    ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்பு அலகு (நன்னீர் மீன்களை இனப்பெருக்கம் மற்றும் வளர்த்தல்) ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகுக்கு மகளிர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் ரூ.15 லட்சம் வழங்கப்படவுள்ளது.

    புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

    புதிய மீன்வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் ரூ.2 லட்சத்து 80 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

    புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தில் 0.5 ஹெக்டேருக்கான செலவினமான ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவினத்தில் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. நன்னீர் மீன்வளர்ப்புக்கான நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகுக்கான செலவினமான ரூ.14 லட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

    250 முதல் 1000 ச.மீ பரப்புள்ள பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்பை ஊக்குவித்திட உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகுக்கு (1000 ச.மீட்டருக்கு) ஆகும் செலவினமான ரூ.36 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியம் ரூ.18 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

    எனவே இந்த திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை, சென்னை 600115 அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன் வருகிற 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள் இணைந்து கடனுதவி வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.
    • காஞ்சிபுரம் மாவட்ட மேலாளர் ராஜாராம், செங்கல்பட்டு முன்னோடி வங்கி மேலாளர் சந்தோஷ்குமார், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ரமணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, மாற்று திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி ஆகியோர் உடனிருந்தனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவகல்லூரி கூட்டரங்கில் 75-வது ஆண்டு சுதந்திர திருநாள் அமுதம் பெருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள் இணைந்து கடனுதவி வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.

    காஞ்சிபுரம் மாவட்ட மேலாளர் ராஜாராம், செங்கல்பட்டு முன்னோடி வங்கி மேலாளர் சந்தோஷ்குமார், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ரமணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, மாற்று திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி ஆகியோர் உடனிருந்தனர்.

    ×